பூந்தமல்லி: சென்னை திருவேற்காடு வேலப்பன்சாவடி ஆற்றங்கரை தெருவில், கூவம் ஆற்றை ஆக்கிரமித்து 40 வீடுகள் கட்டப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின்படி சில மாதங்களுக்கு முன், இவற்றில் 30 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன. 8 வீடுகளின் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றிருந்ததால் அந்த வீடுகளை இடிக்க முடியவில்லை. இந்தநிலையில், இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, ‘‘நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 8 வீடுகளை இடிக்கலாம்’ என்று உத்தரவிட்டார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின்படி பூந்தமல்லி வட்டாட்சியர் புனிதவதி தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் நேற்று காலை பொக்லைன் இயந்திரத்துடன் சம்பவ இடத்துக்கு சென்றனர்.