பெரம்பூர்: வியாசர்பாடி நேரு நகர் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து இந்த பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று இரவு சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடையே சமரசம் பேசியதன் பெயரில் கலைந்து சென்றனர்.