வியாசர்பாடி, பெரவள்ளூர் பகுதியில் குடிநீர் வழங்க கோரி பெண்கள் மறியல்

பெரம்பூர்: வியாசர்பாடி நேரு நகர் பகுதியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் முறையாக வழங்கப்படுவதில்லை. இதுகுறித்து இந்த பகுதி மக்கள் பலமுறை குடிநீர் வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து நேற்று இரவு சத்தியமூர்த்தி நகர் பிரதான சாலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த வியாசர்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடையே சமரசம் பேசியதன் பெயரில் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல் பெரவள்ளூர் கே.சி.காடன் பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் பேப்பர் மில்ஸ் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து பெரவள்ளூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: