திருப்பூரிலிருந்து தூத்துக்குடிக்கு வேனில் கொண்டு வரப்பட்ட ரூ.1.50 லட்சம் ஜவுளி திருட்டு டிரைவர் கைது

தூத்துக்குடி,ஜூன் 25: திருப்பூரில் உள்ள குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் சரவண மாணிக்கம் (40). இவர் அங்கு ஜவுளிமில் வைத்துள்ளார். அந்த நிறுவனத்தில் இருந்து தூத்துக்குடியில் உள்ள ஜவுளி கடைக்கு ஜவுளி லோடு ஏற்றி வந்த வேனை மதுரை முண்டாசுப்பட்டியைச் சேர்ந்த செல்லப்பாண்டி மகன் மருதுபாண்டி (27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். தூத்துக்குடிக்கு வேன் வந்தபோது, அதில் இருந்த ஜவுளி பார்சல்களை கடை ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது அதில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள ஜவுளி மாயமானது தெரியவந்தது.  இதுகுறித்த தகவலின் பேரில் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் மில்அதிபர் சரவண மாணிக்கம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், விசாரணை நடத்தி வேன் டிரைவர் மருதுபாண்டியை கைது செய்தனர். அவர் பதுக்கி வைத்திருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான ஜவுளிகளை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

Related Stories: