ஏரலில் நாளை மாற்று திறனாளிகள் சிறப்பு முகாம்

ஏரல்,  ஜூன் 25: ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் சிறப்பு முகாம் நாளை (26ம் தேதி) நடக்கிறது. தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி நாளை (புதன்) காலை 11 மணிக்கு ஏரல் தாசில்தார் அலுவலகத்தில் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தலைமையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுகவீனத்தின் தன்மை 40 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட அரசு மற்றும் தனியார் வேலையில் இல்லாத மாற்றுதிறனாளிகள் மாவட்ட மறுவாழ்வு அலுவலகம் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பிற திட்டங்கள் மூலம் உதவித் தொகை பெறாதவர்கள் இந்த முகாமில் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டைகளுடன் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஏரல் தாசில்தார் அலுவலகம்  சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை, இறப்பு நிவாரணம், திருமண உதவித் தொகை கோரும் பயனாளிகளும் பயன்பெற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: