வேன் டிரைவர் சுருண்டு விழுந்து சாவு

செய்துங்கநல்லூர், ஜூன் 25: வல்லநாடு அருகே கோனார் குளத்தினை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் செல்வகுமார்(32). இவருக்கு ராமலெட்சுமி என்ற மனைவியும், சரண் (8), மதன் (6) என்ற இரு மகன்களும் உள்ளனர். செல்வகுமார் அருகில் உள்ள காற்றாடி நிறுவனத்தின் வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் குழந்தைகளுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அப்பகுதியிலிருந்தவர்கள் மீட்டு வல்லநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து முறப்பநாடு போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Related Stories: