தேவூரில் ₹10 லட்சத்துக்கு எள் விற்பனை

இடைப்பாடி, ஜூன் 21: இடைப்பாடி அடுத்த தேவூரில், திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று எள் ஏலம் நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் 110 மூட்டை எள்ளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஏலத்தில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டனர். இதில் வெள்ளை எள் ஒரு கிலோ ₹110 முதல் 118.50க்கும், சிகப்பு எள் ஒரு கிலோ ₹102 முதல் ₹116.10க்கும் ஏலம் போனது. ஒட்டுமொத்தமாக விவசாயிகள் கொண்டு வந்த 110 மூட்டை எள் ₹10 லட்சத்துக்கு ஏலம் போனது.

Related Stories: