சேலம், ஜூன் 21: சேலம் அருகேயுள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்த 14 வயதான சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று காலை பள்ளியில் வாந்தி எடுத்த நிலையில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.