×

திருச்சுழி அருகே காளியம்மனுக்கு பொங்கல் விழா

திருச்சுழி, ஜூன் 21:திருச்சுழி அருகே காளியம்மனுக்கு பொங்கல் விழா நடந்தது.திருச்சுழி அருகே உள்ள கல்லுமடம் கிராமத்தில் காளியம்மன் கோயில் விழா கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் காளியம்மன் சிலை களிமண்ணால் உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக புனிதநீர் எடுத்தல், மாவிளக்கு, அக்கினி சட்டி, முளைப்பாரி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. மேலும் உருவாக்கப்பட்ட காளியம்மன் சிலையை முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்திற்கு கொண்டு சென்று அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இரவில் சக்தி கிடாவெட்டு நேர்த்திக்கடனாக பக்தர்கள் செலுத்தினர். தொடர்ந்து  மொட்டை போடுதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.இதில் கத்தாளம்பட்டி, ஆலடிபட்டி, ராமநாயக்கன்பட்டி போன்ற ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காளியம்மனை தரிசித்து சென்றனர்.



Tags : Pongal Festival ,Kaliamman ,Tiruchi ,
× RELATED பக்தர்களின் ‘ஆகோ அய்யாகோ’ கோஷம்...