×

ராஜபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

ராஜபாளையம், ஜூன் 21:ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.ராஜபாளையம் வட்டார பகுதி விவசாயிகள் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் சான்று வழங்கும் சிறப்பு முகாம் அந்தந்த பகுதி ஆர்.ஐ. அலுவலகத்தில் நடைபெற உள்ளது.  இதில் பங்கேற்று பயனடையும் படி ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.ராஜபாளையம் வட்டார பகுதிகளில் உள்ள சிறு, குறு விவசாயிகள் சான்று வழங்கும் சிறப்பு முகாம் அந்தந்த பகுதி ஆர்.ஐ. அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள் சான்று பெற்று கொள்ளலாம். முகாமின்போது பிரதம மந்திரியின் கிசான் சம்மான் திட்டத்தின் கீழ் விவசாய குடும்பங்களுக்கு வருமான ஆதாரத்திற்கான ரூ.6 ஆயிரம் பெறும் திட்டத்திற்கு தங்கள் விவசாய நிலம் சார்ந்த ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டு கொண்டுள்ளார்.


Tags : Special Camp for Farmers ,Rajapalayam ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...