அருப்புக்கோட்டை, ஜூன் 21:அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்கவிழா நடந்தது.கல்லூரி செயலாளர் இளங்கோவன் தலைமை வகித்தார். கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜான் கணேஷ், முதலாமாண்டு மாணவிகளை வாழ்த்தி பேசினார்.கல்லூரி முதல்வர் டாக்டர் கதிர்காமு, துணைமுதல்வர் பவர்ணா ஆகியோர் வரவேற்றனர். நகைச்சுவை தென்றல் துரைப்பாண்டியன், ரமணாஸ் பி.எட். கல்லூரி செயலாளர் பாரதிமுருகன், மற்றும் கல்லூரி நிர்வாகிகள் சங்கரநாராயணன், ஜெயமுருகன், விக்னேஸ், கவிதா, சங்கரி, பேராசிரியர்கள் ரத்தினசாமி, ஜெயலட்சுமி, சக்திவடிவேல், டாக்டர் சந்திரமவுலி, ஆகியோர் வாழ்த்தி பேசினர். கல்லூரி டீன் தில்லை நடராஜன் நன்றி கூறினார்.