×

சாலை விபத்தில் ஒருவர் பலி

விருதுநகர், ஜூன் 21: விருதுநகரில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருந்து திருநெல்வேலிக்கு ஆயில் ஏற்றிக்கொண்டு சிறிய ரக லாரி ஒன்று சென்றது. மதுரை-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகே வரும்போது லாரி விபத்துக்குள்ளானது.விபத்தை அறிந்த சூலக்கரை போலீசார் சம்பவ இடம் வந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே வாகன உதவியாளர்  விக்னேஸ்வரன் (22) உயிரிழந்தார். வாகன ஒட்டுநர் இளங்கோ (29) படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விபத்து குறித்து சூலக்கரை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Tags : road accident ,
× RELATED சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப் பாதையில் விபத்து: 3 பேர் உயிரிழப்பு