×

நாய்கள் கடித்து புள்ளிமான் காயம்

திருச்சுழி, ஜூன் 21:திருச்சுழி குண்டாற்று வனப்பகுதியில் குடிநீருக்காக  குடியிருப்பு பகுதிக்கு வந்த புள்ளிமான் நாய்கள் கடித்து காயமடைந்தது. புள்ளிமானை உயிருடன் மீட்டு அப்பகுதி மக்கள் வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருச்சுழி மற்றும் குண்டாற்று பகுதிகளில் சமுதாய வனக்காடுகள் பெருமளவில் உள்ளன. இப்பகுதியில் ஏராளமான மான்கள் மற்றும் மயில்கள், முயல்கள், நரி, காட்டுபன்றிகள் என ஏராளமான வனவிலங்குள் சுற்றிதிரிகின்றன. தற்போது பருவமழை பெய்யாததால் காட்டுப்பகுதிகளில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் வனவிலங்குகள் விவசாய நிலங்கள் மற்றும் ஊருக்குள் வருகின்றன. சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டு அடிக்கடி உயிரிழக்கின்றன. இந்நிலையில் நேற்று திருச்சுழி குண்டாறு பகுதியை ஒட்டிய முத்துராமலிங்கம் நகர் குடியிருப்பு பகுதிக்குள் குடிநீருக்காக வந்த பிறந்து 6 மாதமே ஆன பெண் புள்ளிமானை தெரு நாய்கள் துரத்தி தாக்கின. இதில் படுகாயமடைந்த புள்ளிமானை அப்பகுதி மக்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு காயமடைந்த புள்ளிமான் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tags :
× RELATED இடுக்கியில் இன்று பிரசாரம் நிறைவு