×

ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் கலந்துரையாடல்

கம்பம், ஜூன் 21:  கம்பம் ஆதிசுஞ்சனகிரிமகளிர் கல்லூரியில் திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுடன் கல்லூரிப் பேராசிரியர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலர் முன்னாள் எம்எல்ஏ கம்பம் இராமகிருஷ்ணன் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ரேணுகா வரவேற்புரையாற்றினார். சென்னை உயர்நீதிமன்ற சட்ட அலுவலர் முரளி குமரன் வாழ்த்தி பேசினார். கலைப்புலி தாணு பேசுகையில், திரைப்படம் தயாரிப்பதற்கான பல்வேறு அனுபவங்களையும், வாழ்வியல் சிந்தனைகளையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரிப் பேராசிரியைகள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர். தமிழ்த்துறை உதவிப்பேராசிரியை தமிழ்ச்செல்வி நன்றியுரையாற்றினார்.


Tags :
× RELATED கடமலைக்குண்டு அருகே காட்டு யானைகளால்...