×

வாகனம் மோதி வாலிபர் படுகாயம்

தேவதானப்பட்டி, ஜூன் 21: சின்னமனூரைச் சேர்ந்த பிரேம்குமார்(32) வத்தலக்குண்டில் இருந்து தேவதானப்பட்டி வழியாக தேனி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தேவதானப்பட்டி புறவழிச்சாலை வழியாக வரும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டுச் சென்றது. அருகில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் இருந்த பிரேம்குமாரை மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
காட்ரோடு போலீஸ் செக்போஸ்ட்டில் இருந்து பெரியகுளம் நுழைவாயில் வரை  வேகமாக சென்று விபத்தை ஏற்படுத்தி தப்பிசெல்லும் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மட்டும் அடையாளம் தெரியாத வாகனம் மோதி  5 விபத்துக்கள் ஏற்படுத்தியுள்ளது. இதில் லேசான காயங்களுடன் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிற்கு சென்றவர்கள் அதிகம் என கூறப்படுகிறது.  





Tags : Plaintiff ,vehicle collision ,
× RELATED வாகனம் மோதி மான் பலி