×

தையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, ஜூன் 21: சிவகங்கை மாவட்டத்தில் அரசு சார்பில் தையல் இயந்திரம் இலவசமாக பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:சமூகநலத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 2019-20ம் நிதியாண்டிற்கு சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விதவைகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனுடைய பெண் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிர் உள்ளிட்ட தகுதியுடைய பயனாளிகள் 5.7.2019க்குள் விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கணவரால் கைவிடப்பட்டவர், விதவை, மாற்றுத் திறனுடைய பெண் என்பதற்கான சான்றிதழ், தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட குடும்ப வருமானச் சான்று(ஆண்டு வருமானம் ரூ.72ஆயிரத்திற்க்கு மிகாமல் இருக்க வேண்டும்), வயதுச்சான்றிதழ் (20 முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்), விண்ணப்பதாரர் தையல் தெரிந்தவர் என்பதற்கான சான்றிதழ், சாதிச்சான்று, இருப்பிடச்சான்று, ஆதார் அட்டை நகல், விண்ணப்பதாரரின் கலர் போட்டோ ஆகிய ஆவணங்களை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags :
× RELATED பள்ளி மாணவர்களுக்கு கோடை கொண்டாட்ட நிகழ்ச்சி: மே 7 முதல் 17 வரை நடக்கிறது