×

திருடு போன 3 பசுக்கள் மீட்பு

மேலூர், ஜூன் 21: மேலூர் திருவாதவூர் ரோட்டில் கொட்டகுடி விலக்கில் வசித்து வருபவர் குமார். அங்குள்ள தென்னந்தோப்பில் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் பசுக்களை வளர்த்து வருகிறார். கடந்த 16ம் தேதி வீட்டின் முன்பு கட்டியிருந்த 3 பசுக்களை காணவில்லை. புகாரின் பேரில் மேலூர் போலீசார் வழக்குப்பதிந்து, பசுக்களை பல்வேறு பகுதிகளில் தேடி வந்தனர். அந்த 3 பசுக்களும் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் தென்னந்தோப்பில் இருப்பதாக தகவல் கிடைக்கிறது. இதனை தொடர்ந்து மேலூர் போலீசார் அங்கு சென்று அந்த 3 பசுக்களை மீட்டு மேலூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். மேலும் பசுக்களை வைத்திருந்த மகேந்திரனை கைது செய்தனர்.


Tags :
× RELATED கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை