×

பொள்ளாச்சியை போல கரும்பு தோட்டத்தில் கைவரிசை பள்ளி, கல்லூரி மாணவிகளை மிரட்டி பலாத்காரம்

கள்ளக்குறிச்சி, ஜூன் 21:   கள்ளக்குறிச்சி விளாந்தாங்கல் ரோடு பகுதியை சேர்ந்த சாந்தி மகள் ரத்தினவள்ளி(19) இவர் கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் பிஎஸ்சி கணிதம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரிக்கு செல்லும்போது  அம்மன் நகர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் பைனான்சியர் ராஜா(45) மற்றும் அவரது நண்பர்  வஉசி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வேலுமணி(24) ஆகியோர் கல்லூரி மாணவி ரத்தினவள்ளியை  தினமும் பின் தொடர்ந்து சென்று பாலியல் ரீதியாக பேசி  தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.  இது குறித்து கல்லூரி மாணவி  பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். தொடர்ந்து இருவரையும் எச்சரித்தும், தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ளவில்லை. இதையடுத்து கல்லூரி மாணவியின் தாய்  சாந்தி கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் 2 நாட்களுக்கு முன் வழக்கு பதிந்து ராஜா மற்றும் அவரது நண்பர் வேலுமணி ஆகியோரை கைது செய்தனர்.

விசாரணையில் பைனான்சியர் ராஜா பல இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து வைத்து, மிரட்டி தனது கரும்பு தோட்டத்தில் உல்லாசம் அனுபவித்து வந்ததாக தெரிகிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை போன்று, பாதிக்கப்பட்ட பெண்கள், கள்ளக்குறிச்சி போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர். அவரது செல்போனில் உள்ள படம் மற்றும் வீடியோவை அழிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் ராஜாவின் செல்போனை  கைப்பற்றி ஆய்வு செய்த போது,  100க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீடியோக்கள் அனைத்தும் உண்மையிலே எடுக்கப்பட்டதா? அல்லது இணையத்தில் இருந்து ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்துள்ளார்களா? என போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இதில் பைனான்சியர் ராஜா தலைமையில் 4 பேர் கொண்ட கும்பல் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை திட்டமிட்டு வலை வீசி தங்கள் இச்சைக்கு பலியாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது.

கோட்டை விட்ட போலீஸ்’
பல இளம் பெண்கள் குளிப்பதை வீடியோ, எடுத்து கொண்டு அந்த பெண்ணை மிரட்டி அடி பணிய வைப்பது வாடிக்கையாக வைத்துள்ளனர். ராஜாவின் மோட்டார் கொட்டகை அருகில் உள்ள கரும்பு தோட்டம் அருகில் 25க்கும் மேற்பட்ட மதுபான காலி பாட்டில்கள் குவியலாக கிடக்கிறது.  மதுபோதையில் பள்ளி, கல்லூரி மாணவிகளை குறிவைத்து, இதேபோன்று  உல்லாசமாக  இருந்துள்ளனர். இதற்கு ஒதுக்குப்புறமாக இருக்கும். கரும்பு தோட்டத்தை பயன்படுத்தியதால் யாருக்கும் தெரியவில்லை. பைனான்சியர் ராஜாவின், நண்பர்கள் கள்ளக்குறிச்சி போலீஸ் நண்பர்கள் குழுவில் இருந்து கொண்டு வாகனங்களில் போலீஸ் என எழுதிவைத்துக்கொண்டு வலம் வந்துள்ளனர். தற்போது  ராஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தால் பொள்ளாச்சியில் நடந்த சம்பவங்களை மிஞ்சும் அளவுக்கு தகவல் வெளியாகும் எனக்கூறப்படுகிறது.  கடந்த 6 மாதத்துக்கு  மேலாக கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் இந்த சம்பவம் குறித்து   உளவுத்துறை  தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல் உள்ளூர் போலீசார் கோட்டை விட்டுள்ளதாக தெரிகிறது.   ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை வாழ்க்கையை நாசமாக்கியவர்கள் யார், யார் என்பதை கண்டறிய தனிப்படை  அமைத்து விசாரணை நடத்த வேண்டும். பாரபட்சமின்றி  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Tags : Pollachi ,school ,Sugarcane Estate ,college students ,
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு