வாலிபர் மீது தாக்குதல்

நாங்குநேரி, ஜூன் 21: நாங்குநேரி அருகேயுள்ள மஞ்சங்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த வானமாமலை மகன் சிவன் பாண்டி (31). விவசாயியான இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சுப்பிரமணியன் (36) என்பவருக்கும் முன்விரோதம் காரணமாக சம்பவத்தன்று தகராறு ஏற்பட்டது. இதில் தாக்கப்பட்ட சிவன்பாண்டி நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நாங்குநேரி எஸ்.ஐ.ஞானராஜா வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை தேடி வருகிறார்.

Related Stories: