களக்காடு, ஜூன் 21: களக்காட்டில் தோட்டத்து மரத்தில் கட்டிட தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.களக்காடு சிங்கம்பத்தில் உப்பிலாங்குளம் கால்வாய் அருகேயுள்ள ஒரு தோட்டத்தில் நேற்று காலை ஆண் ஒருவர் தூக்கில் தொங்கினார். சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். இதுகுறித்து களக்காடு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சபாபதி, எஸ்ஐ ராஜமணி மற்றும் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் அவர் களக்காடு அருகே கல்லடி சிதம்பரபுரம் நல்லநாதபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அசரப்அலி(54) என்பது தெரியவந்தது.