×

ரேஷன் கடைகளில் முறைகேடு விற்பனையாளர்களிடம் அபராதம் வசூல்

தூத்துக்குடி, ஜூன் 21: தூத்துக்குடி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் இந்துமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் மற்றும் உடன்குடி பகுதிகளில் உள்ள 54 நியாய விலைக் கடைகளில் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் (19ம் தேதி) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அத்தியாவசியப் பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களான துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சமையல் எண்ணெய் ஆகிய பொருட்களிலும் இருப்பு குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  இதுதவிர,  100 கிலோ அரிசி, 71 கிலோ சர்க்கரை, 45.5 லிட்டர் மண்ணெண்ணெய் உள்ளிட்டவை முறைகேடு செய்திருப்பது தெரிய வந்தது.இதையடுத்து,  முறைகேடுகள் செய்த விற்பனையாளர்களிடம் இருந்து ரூ.10,075  ரொக்கம் அபராதத் தொகையாக வசூலிக்க உத்தரவிடப்பட்டது. இவ்வாறு தெரிவித்து உள்ளார்.



Tags : ration stores ,
× RELATED ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில்...