×

விழிப்புணர்வு பேரணி

கிருஷ்ணகிரி,ஜூன் 21: உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி, கிருஷ்ணகிரியில்  நேற்று தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில்,  விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில்  துவங்கிய பேரணியை, கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். லண்டன்பேட்டை, பெங்களூர் சாலை வழியாக 5 ரோடு ரவுண்டானாவில் பேரணி  நிறைவடைந்தது. பேரணியின் போது, 18 முதல் 65 வயது வரையுள்ள இருபாலரும் ரத்த தானம் செய்யலாம். மூன்று  மாதங்களுக்கு ஒரு முறை ரத்த தானம் செய்யலாம் என்பதை வலியுறுத்தி கோஷங்கள்  எழுப்பியவாறு கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றனர்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்