×

சூதாடிய 5 பேர் கைது

கிருஷ்ணகிரி, ஜூன் 21: கிருஷ்ணகிரி அருகே சூதாடிய 5 ேபரை போலீசார் கைது செய்து ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணகிரி தாலுகா எஸ்ஐ கண்ணன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மேட்டுப்பாறை பகுதியில் சூதாடிக் கொண்டிருந்தவர்களை சுற்றிவ ளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள் கிருஷ்ணகிரியை சேர்ந்த சம்பத்குமார்(25), அன்பரசன்(30), செல்வம்(43), செல்வகுமார்(34), சுரேஷ்குமார்(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ₹3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags :
× RELATED மனைவியுடன் பஸ்சில் வந்த டிரைவர் திடீர் சாவு