×

வெங்கமேடு அருகே நிலத்தகராறில் மோதல்: ஒருவருக்கு கத்திக்குத்து

கரூர், ஜூன் 21:  கரூர் வெங்கமேடு அடுத்துள்ள அருகம்பாளையத்தை சேந்தவர் பெரியசாமி(44). இவரும், மின்னாம்பள்ளியை சேர்ந்த பாபு என்பவரும் இணைந்து பைனான்ஸ் தொழில் நடத்தி வந்தனர். அவ்வப்போது, நிலம் வாங்கிப் போட்டு விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட இடத்தை வாங்கிப் போட்டனர். வாங்கிப் போட்ட இடத்தை, பாபு மட்டும் தன்னிச்சையாக விற்பனை செய்ததாகவும், அதற்கான தொகையை பெரியசாமிக்கு வழங்காமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 18ம்தேதி இரவு, வெங்கமேடு அருகே பெரியசாமியும், பாபுவும் பேசிக் கொண்டிருந்த போது, தகராறு ஏற்பட்டது.

பாபு மற்றும் உடன் வந்த சங்கர் ஆகிய இருவரும் சேர்ந்து பெரியசாமியை கத்தியால் குத்த முயலும் போது, தடுக்க வந்த பெரியசாமியின் தம்பி சிவசாமிக்கு(41) காயம் ஏற்பட்டது. காயமடைந்த சிவசாமி, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பெரியசாமியின் புகாரின் பேரில், வெங்கமேடு போலீசார், தப்பியோடி பாபு, சங்கர் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags : Venkamedu ,
× RELATED வெங்கமேடு பாலம்மாள்புரத்தில் கிராமத்தை நோக்கி காவல் துறை நிகழ்ச்சி