×

கார் மோதி இளைஞர் பலி

தரங்கம்பாடி, ஜூன் 21: செம்பனார்கோவில் அருகே கார் மோதி இளைஞர் பரிதாபமாக இறந்தார். செம்பனார்கோவில் அருகே உள்ள முடிகண்டநல்லூர் கிராமத்தை சேர்ந்த நாகேந்திரன் மகன் செல்வஅரவிந்த்(21). பொறியியல் படித்திருக்கிறார். நேற்று முன்தினம் இரவு செல்வஅரவிந்த் செம்பனார்கோவிலிலிருந்து பைக்கில் முடிகண்டநல்லூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது வல்லம் அருகே எதிரே வந்த கார் செல்வஅரவிந்த் மீது மோதியதில் பலத்த காமடைந்து மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதைகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குபதிவு செய்து காரை ஓட்டி வந்த அனந்தநல்லூரை சேர்ந்த பரசுராமனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : car collision ,
× RELATED ஆத்தூர் அருகே கார்கள் நேருக்கு நேர்...