×

அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் போராட்டம்

காரைக்கால், ஜூன் 21: காரைக்கால் நெடுங்காட்டில், தனியார் (சௌந்தரராஜா மில்ஸ்) நூற்பாலை தொழிலாளர் நல்வாழ்வுச் சங்க நிர்வாகிகள், சங்க கவுரவ தலைவர் தேவமணி ஆகியோர், காரைக்கால் தொழிலாளர் நலத்துறை அதிகாரியிடம் வழங்கிய புகார் மனுவில் கூறியிருப்பது:
காரைக்கால் நெடுங்காட்டில் இயங்கும் தனியார் (சௌந்தரராஜா மில்ஸ்) நூற்பாலையில் சுமார் 400 உள்ளூர் மற்றும் வெளி மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். உள்ளூர் தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் காலதாமதமாக வழங்கப்படுகிறது. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த இஎஸ்ஐ நிதியை கட்டாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு தொழிற்சாலை விதிகளின்படி கேண்டீன் அமைக்க வேண்டும். ஆனால், இந்த ஆலையில் கேண்டீன் வசதியில்லை. இரவு நேரத்தில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த தேநீர் நிறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரமான குடிநீர் கிடைக்கவில்லை. இரவு பணியின்போது மின்தடை ஏற்படும் பட்சத்தில், ஜெனரேட்டர் வசதியோ, அவசர நிலை பயன்பாட்டு விளக்கோ அமைத்து தரப்படவில்லை. பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நீடிக்கிறது. வெளிமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு செய்து தரும் வசதிகள் இச்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தரப்படுவதில்லை.

இதுகுறித்து பல நிலைகளில் புதுச்சேரி தொழிலாளர் துறை தலைமை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், எந்தவொரு நடவடிக்கையுமின்றி, தொழிலாளர் துறை நிர்வாகம் ஆலைக்கு சாதகமான வகையிலேயே செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் துறையின் இந்த போக்கு ஆரோக்கியமானதாக இல்லை. இதேநிலை நீடித்தால் ஆலை நிர்வாகம், தொழிலாளர் துறையை கண்டித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டியிருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : facilities ,
× RELATED வாக்குச்சாவடிகள் அடிப்படை வசதிகள்...