×

சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் கீழ்வேளூர் அருகே

கீழ்வேளூர், ஜூன் 21: நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த ராதாமங்கலம் தெற்காலத்தூர் சாந்தநாயகி அம்மாள் சமேத நாகநாத சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. .மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17ம் தேதி காலை விக்னேஷ்வர பூஜையுடன் யாக பூஜை தொடங்கியது. 18ம் தேதி மாலை முதல்கால யாக பூஜையும், 19ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜையும், இரவு மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

நேற்று அதிகாலை கோபூஜை நடைபெற்று நான்காம் கால யாக பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மகா அபிஷேகமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நாகநாதசுவாமி, சாந்தநாயகி அம்மன் கைங்கர்யா சபா திருப்பணி குழுவினர், கிராமவாசிகள் செய்திருந்தனர்.

Tags : children ,
× RELATED புது வாழ்விற்கு வழியமைத்ததிரு(புது)நாள்