×

தொண்டபாடியில் மனுநீதி முகாம் நிறைவு விழா 142 பேருக்கு ரூ.28 லட்சத்தில் நலஉதவி

பாடாலூர், ஜூன் 21: ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டபாடி கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழாவில் 142 பேருக்கு ரூ. 28 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி வழங்கினார். ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ஊராட்சிக்கு உட்பட்ட தொண்டபாடி கிராமத்தில் சிறப்பு மனுநீதி நிறைவு நாள் விழா நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் அழகிரிசாமி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். விழாவில் வருவாய்த்துறை சார்பில் 127 பேருக்கு ரூ.19.12 லட்சம் மதிப்பிலும், தாட்கோ மூலம் ஒருவருக்கு ரூ.7.60 லட்சம் மதிப்பிலும், வேளாண்மைத்துறை மூலம் 5 பேருக்கு ரூ.12 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 4 பேருக்கு ரூ.85 ஆயிரம் மதிப்பிலும், கால்நடைத்துறை மூலம் 7 பேருக்கு ரூ.18 ஆயிரம்மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் 4 பேருக்கு ரூ.23 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.ஆர்டிஓ விஸ்வநாதன், தனித்துணை கலெக்டர் மனோகரன், தாசில்தார் ஷாஜகான், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் கிருஷ்ணராஜ், வருவாய் ஆய்வாளர் கருணாகரன், கிராம நிர்வாக அலுவலர் முத்தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Tags : Puthiyapathy Camp ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...