×

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஜூன் 21: பெரம்பலூர் பாலக்கரை முன்பு தொடங்கிய ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை எஸ்பி திஷாமித்தல் கொடியசைத்து தொடங்கிவைத்தார். டிஎஸ்பி ரவீந்திரன் முன்னிலை வகித்தார். போலீசார் மற்றும் பொதுமக்கள் ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் விழிப்புணர்பு பேரணி சென்றனர். மேலும் தலைகவசம் அணிவதன் முக்கியத்தும் குறித்தும், அதனால் ஏற்படும் விளைவுகள், நன்மைகள் குறித்த விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகைகளை பள்ளி மாணவர்கள் ஏந்தி சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில் இன்ஸ்பெக்டர் (பொ) நித்யா, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன், எஸ்ஐக்கள் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED புதா.பழூர் அருகே அரசு அனுமதியின்றி மதுவிற்ற 2 பேர் கைது