×

பெரம்பலூரில் 23ம் தேதி நடைபெறும் கணினி பயிற்றுனர் தேர்வு முன்னேற்பாடு பணியை செய்ய வேண்டும்

பெரம்பலூர், ஜூன் 21: பெரம்பலூர் மாவட்டத்தில் கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வு வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டுமென கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தா ஆலோசனை வழங்கினார். பெரம்பலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் 23ம் தேதி நடைபெறும் கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வை சிறப்பான முறையில் நடத்துவதற்கான முன்னேற்பாட்டு கூட்டம் நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்து பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் கணினி பயிற்றுனர்களை தேர்வு செய்வதற்காக கணினி வழியிலான தேர்வு, ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் 23ம் தேதி நடக்கிறது.

இந்த தேர்வை மாற்றுத்திறனுடைய 9 பேர் உட்பட மொத்தம் 128 பேர் எழுதவுள்ளனர். இந்த தேர்வுகளை சிறப்பாக நடத்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தேர்வு கூடங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதி குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும், தேர்வு நடைபெறும் நாளன்று தேர்வுக்கு செல்ல உள்ளவர்களின் நலன் கருதி, தேவையான அளவு பேருந்துகளை தேர்வுக்கூடங்கள் அமைந்துள்ள வழித்தடத்தில் இயக்கவும், தேர்வுகள் அனைத்தும் கண்ணி வழியில் நடப்பதால் தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டியும் தண்ணீர் மற்றும் தூய்மை பணிகளை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என்றார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருளரங்கன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் சிதம்பரம், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...