×

வந்தவாசி அருகே கொத்தடிமையாக இருந்த 3 பேர் மீட்பு விறகு வியாபாரிக்கு வலை

வந்தவாசி, ஜூன் 21: வந்தவாசி அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை, வருவாய் துறையினர் மீட்டனர். மேலும், தலைமறைவாக உள்ள விறகு வியாபாரியை தேடி வருகின்றனர்.வந்தவாசி அடுத்த தெள்ளாரில் விறகு வெட்டும் தொழிலுக்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செய்யார் சப்-கலெக்டர் அன்னம்மாள் மற்றும் வருவாய் துறையினர் நேற்று முன்தினம் தெள்ளார் பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த விறகு வியாபாரி சுதாகர்(40) என்பவர், பொன்னூர் கிராமத்தை சேர்ந்த ராஜாமணி(50), அவரது மனைவி பூங்கொடி(45), பேத்தி வள்ளி(6) ஆகிய 3 பேரையும் கொத்தடிமைகளாக வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும், இவர்கள் ₹3 ஆயிரத்துக்காக விறகு வெட்டும் தொழிலுக்கு பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் 3 பேரையும் மீட்டனர். மேலும் இதுகுறித்து விஏஓ முருகானந்தம் தெள்ளார் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மார்டீன் ஜோசப் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சுதாகரை தேடி வருகின்றனர்.

Tags : Vandavasi ,firewood dealer ,
× RELATED தெள்ளார் அருகே நிலத்தகராறில் விவசாயி...