×

சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

மஞ்சூர், ஜூன்.21:  மஞ்சூர் அருகே உள்ளது கண்டிபிக்கை. இப்பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் மஞ்சூர் மேல்பஜாரில் இருந்து கண்டிபிக்கை கிராமத்திற்கு செல்லும் சாலை கீழ்குந்தா பேரூராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இந்நிலையில் கண்டிபிக்கை சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆனதால் சாலை மிகவும் பழுதடைந்து மோசமான முறையில் காட்சியளிக்கிறது. சாலையில் பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளதுடன் ஆங்காங்கே குழிகள், பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமம் ஏற்படுகிறது.  எனவே மஞ்சூர் மேல்பஜாரில் இருந்து கண்டிபிக்கை வரை சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

Tags :
× RELATED கோத்தகிரி நேரு பூங்கா கோடை சீசனுக்கு தயார்