பாபநாசம் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

பாபநாசம், ஜூன் 21: பாபநாசம் பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகளவில் மின்வெட்டு உள்ளது. இதனால் இல்லத்தரசிகள், வணிகர்கள், குழந்தைகள், முதியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி மின்சாரம் தடை பட்டது. இதுகுறித்து கம்ப்யூட்டர் சென்டர் வைத்துள்ள சுரேஷ் கூறுகையில், கடந்த சில நாட்களாக காலையில் போன மின்சாரம் இரவில் வருவதும், அடிக்கடி மின்சாரம் வந்து போவதாக இருப்பதால் சென்டரை திறப்பதா, வேண்டாமா என்ற நிலை ஏற்படுகிறது.

மேலும் இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள் நிம்மதியாக தூங்க முடியவில்லை. மின்சார அலுவலகத்துக்கு போன் செய்தால் பிசி என்று வருகிறது. வெயிலின் கடுமை சற்றும் குறையாத நிலையில் மின்சாரத்தை அடிக்கடி நிறுத்துவது மக்களை மேலும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. கபிஸ்தலம் பகுதியில் லோவோல்டேஜ் மின்சாரம் வருவதால் மோட்டாரும் இயங்கவில்லை என்றார். எனவே அடிக்கடி மின்சாரம் தடைபடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: