திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் உலக இசை தினவிழா

திருவையாறு, ஜூன் 21: திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் உலக இசை தினவிழா நடந்தது. விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழிசை, நாட்டுப்புற இசை, கருவி இசை, தாள கருவி இசை போட்டிகள் நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து உலக இசை தினவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். தவில் சக்கரவர்த்தி கலைமாமணி கோவிந்தராஜன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.

அதைதொடர்ந்து சென்னை பாலசுப்ரமணியம் தலைமையில் இசை வினாடி வினா போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. உலக இசை தினவிழாவையொட்டி தவில் சக்கரவர்த்தி கலைமாமணி கோவிந்தராஜன், தவில் வலை தயாரிப்பாளர் பரமசிவம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். நிகழ்ச்சில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பேராசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்.

Related Stories: