திருவையாறு, ஜூன் 21: திருவையாறு அரசு இசைக்கல்லூரியில் உலக இசை தினவிழா நடந்தது. விழாவையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழிசை, நாட்டுப்புற இசை, கருவி இசை, தாள கருவி இசை போட்டிகள் நடத்தப்பட்டது. அதைதொடர்ந்து உலக இசை தினவிழா நடந்தது. கல்லூரி முதல்வர் உமாமகேஸ்வரி வரவேற்றார். தவில் சக்கரவர்த்தி கலைமாமணி கோவிந்தராஜன், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பேசினார்.