×

நிதி மோசடியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த வங்கி ஊழியர் கைது

கும்பகோணம், ஜூன் 21: நிதி மோசடியில் ஈடுபட்டு 6 மாதமாக தலைமறைவாக இருந்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.
கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் எழுத்தராக இருந்தவர் செல்வம் (48). நாககுடி மாந்தோப்பு தெருவை சேர்ந்த இவர், வங்கியில் நிதி மோசடி செய்ததும், வங்கியில் அடகு வைத்த நகைகளை வேறு இடத்தில் மாற்றி அடகு வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட்டது.

இவரை கண்டுபிடிக்க கோரி ஐகோாட்டிலும் மனு செய்யப்பட்டது. இதையொட்டி செல்வம் தலைமறைவானார். போலீசார் வழக்குப்பதிந்து செல்வத்தை தேடி வந்தனர். 6 மாதம் தலைமறைவாக இருந்த செல்வத்தை நேற்று முன்தினம் திருப்பதியில் கைது செய்தனர். பின்னர் அவரை மதுரை கொண்டு சென்று ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : Bank employee ,
× RELATED கமிஷனருக்கு கொரோனா தடுப்பூசி பெண்ணை...