×

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, ஜூன் 21: பூதலூர் அருகே ராயமுண்டான்பட்டி சொசைட்டி அருகில் ரோந்து பணியில் இருந்த பூதலூர் போலீசார், அந்த வழியாக வந்த டிராக்டரை மறித்து சோதனையிட்டனர். அப்போது டிராக்டரில் வந்த ஒருவர் தப்பியோடிவிட்டார். மற்றொருவர் பிடிபட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் சொரக்குடிபட்டி தெற்கு தெருவை சேர்ந்த  வீரமுத்து (17) என்பதும், அனுமதியின்றி மணல் எடுத்து வந்ததும் தெரியவந்தது. பின்னர் டிராக்டரை பறிமுதல் செய்து வீரமுத்துவை கைது செய்தனர்.

Tags : Sand ,
× RELATED தாது மணல் நிறுவனத்திடம் ரூ.1.72 கோடி...