பால்குட திருவிழா

பாபநாசம், ஜூன் 21: பாபநாசம் அடுத்த ராஜகிரி கலைமேலழகர் அய்யனார் கோயில் பிரம்மோத்சவத்தையொட்டி கடந்த 7ம் தேதி காப்பு கட்டப்பட்டது. கடந்த 8ம் தேதி முதல் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. கடந்த 16ம் தேதி பால்குட திருவிழா, தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதேபோல் பாபநாசம் அடுத்த கோயில் தேவராயன்பேட்டை தில்லையம்மன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 12ம் தேதி காப்பு கட்டப்பட்டது. 14ம் தேதி பால்குட திருவிழா நடந்தது. 15ம் தேதி மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. கோட்டைச்சேரி முனியாண்டவர் கோயிலில் பால்குட திருவிழா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories: