×

பால்கனியில் நடந்து சென்றபோது தவறி விழுந்து இன்ஜினியர் பலி

தஞ்சை, ஜூன் 21: தஞ்சை கிழக்கு அலங்கத்தை சேர்ந்தவர் மகேஷ் கண்ணன் (32). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.  இவரது மனைவி லட்சுமி (31). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளாகிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லட்சுமிக்கு சமீபத்தில் தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.

இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக மகேஷ்கண்ணன், சிவகங்கையில் இருந்து தஞ்சைக்கு வந்தார். அப்போது வீட்டின் பால்கனிக்கு நடந்து சென்றார். அங்கு திடீரென கால் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேஷ்கண்ணன் இறந்தார்.இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags : Engineer ,balcony ,
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்