×

கலெக்டர் அறிவிப்பு வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு நாள் முகாமில் 160 கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு

வலங்கைமான், ஜூன் 21: வலங்கைமான் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில் வரப்பெற்ற நானூற்று ஐம்பது மனுக்களில் நூற்று அறுபது மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நிறைவுநாள் நிகழ்ச்சியில் அதற்கான ஆணைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள கோவிந்தகுடி, ஆலங்குடி, ஆதிச்சமங்கலம் உள்ளிட்ட 71 வருவாய் கிரமங்களுக்கு 1428ம் ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்ச்சி கடந்த ஆறாம் தேதி துவங்கி மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை தலைமையில் நடைபெற்றது.

வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில் பட்டா மாறுதல் தொடர்பாக 115 மனுக்களும், வீட்டு மனைப்பட்டா தொடர்பாக 41 மனுக்களும், முதியோர் உதவித் தொகை தொடர்பாக 203 மனுக்களும், குடும்ப அட்டை கோருதல் தொடர்பாக 16 மனுக்கள் உட்பட நானூற்று ஐம்பது மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

அதனையடுத்து நடைபெற்ற ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சியில் நூற்று அறுபது மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டு அதற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மதியழகன், சமூகபாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் தேவகி, தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மகேஷ், மண்டல துனை வட்டாட்சியர் வெங்கடேஷ், முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் ஆனந்த், ரவி உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Collector ,announcement ,Jamabandi ,office ,Valangaiman taluk ,closing camp ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...