×

எம்எல்ஏ ஆடலரசன் ஏற்பாடு பைக்குகள் மோதலில் 2 பேர் படுகாயம்

முத்துப்பேட்டை, ஜூன் 21: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கீழபெருமழை புதுத்தெருவை சேர்ந்தவர் முருகவேல்(45) இவர் தனது பைக்கில் இடும்பாவனம் வந்தார். எதிரே மேலபெருமழை தெற்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் (48) என்பவர் அவரது பைக்கில் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். இடும்பாவனம் கடைதெரு அருகே இருவரது பைக்குகளும் நேருக்குநேர் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இருவருக்கும் பலத்தை காயம் ஏற்பட்டதையடுத்து அப்பகுதியினர் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் முருகவேலுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர பிரிவில் வைத்து சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து முத்துப்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Tags : Adalarasan ,
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்