திருச்சியில் மைனர் பெண்ணை ஏமாற்றி மணம் முடித்த லோடுமேன் கைது

திருச்சி, ஜூன் 21: திருச்சி தென்னூர் இனாம்தார்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் துபாயில் வீட்டு வேலை செய்து வருகிறார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இருவரும் திருச்சியில் தங்கியுள்ளனர். இவரது உறவினர் ராஜ். இவரது மகன் சுரேஷ்குமார்(21), காந்தி மார்க்கெட்டில் லோடுமேனாக உள்ளார்.

இந்நிலையில் சிறுவயது முதல் வனிதா மகளிடம் சுரேஷ்குமார் நன்றாக பேசி பழகி உள்ளார். கடந்த 17ம் தேதி வனிதாவின் மகளை அழைத்துக்கொண்டு சமயபுரம் சென்ற சுரேஷ்குமார், அங்கு அவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தார். இதையறிந்த இவரது அண்ணன் தங்கையை ஏமாற்றி அழைத்து சென்று திருமணம் செய்தது குறித்து ரங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்குப்பதிந்து லோடுமேன் சுரேஷ்குமார் மீது போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி மத்திய சிறையில் அடைத்தார். தொடர்ந்து மைனர் பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சையும் மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: