ஏர்போர்ட், ஜூன் 21: திருச்சி விமான நிலையத்தில் ரூ.59.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளிடம் விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை உதவி ஆணையர் பண்டாரம் மற்றும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த ஹசாருதீன், இளையான்குடியைச் சேர்ந்த சாகுல்ஹமீது, முகம்மது ரசூல் ஆகியோர் தங்கள் ஆசனவாயில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.