திருச்சி, ஜூன் 21: ரங்கத்தில் சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி 23ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக 30ம் தேதி சீதா கல்யாண மஹோத்சவம் நடக்கிறது. ரங்கம் வடக்கு சித்திரை வீதியில் இந்து சமய மன்றம் சார்பில் வருடந்தோறும் சமஷ்டி உபநயனம் மற்றும் சீதா கல்யாண மஹோத்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி 42ம் ஆண்டு சமஷ்டி உபநயனம் வரும் 23ம் தேதி நடக்கிறது. முன்னதாக 22ம் தேதி மாலை 3 மணிக்கு உதகசாந்தி நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. 24ம் தேதி மற்றும் 25ம் தேதி ஆகிய இரு தினங்கள் வேளுக்குடி கிருஷ்ண சுவாமியின் ஏன்? ஏன்? ஏன்? என்ற தலைப்பில் உபன்யாச நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 27ம் தேதி மதி விசாகா ஹரியின் சிஷ்யை நிதியின் சீதா கல்யான சங்கீத உபன்யாசமும் நடக்கிறது.