திருச்சி, ஜூன் 21: ரங்கம் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தரிடம் ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் களவுபோனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருவள்ளுர் மாவட்டம் கங்கவள்ளிபுரம் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன்(47). இவர் கடந்த 16ம் தேதி தனது வயதான தாயை அழைத்துக்கொண்டு ரங்கத்திற்கு சாமி தரிசனத்திற்கு வந்தார். வடக்கு ஆண்டாள் வீதியில் காரை நிறுத்திவிட்டு, முதியோர் தள்ளுவண்டியில் தாயை வைத்துக்கொண்டு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் வந்தார்.