குடிப்பதை மனைவி கண்டித்ததால் கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி, ஜூன் 21: ரங்கம் ராஜகோபால் நகரை சேர்ந்தவர் ஆறுமுகம்(40), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி அகிலா(38). இந்நிலையில் தினமும் ஆறுமுகம் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ஆறுமுகம் குடித்துவிட்டு வந்ததையடுத்து அவரை அகிலா கண்டித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த ஆறுமுகம் அனைவரும் தூங்கிய நிலையில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அகிலா அளித்த புகாரின் பேரில் ரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: