முசிறி அருகே தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் மீட்பு

தா.பேட்டை ஜீன் 21: முசிறி அருகே உமையாள்புரம் கிராமத்திற்கு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தியதால் பொதுமக்கள் புள்ளிமானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். முசிறி அருகே உமையாள்புரம் கிராமத்திற்கு அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி 3 வயதுடைய புள்ளிமான் ஒன்று வந்தது. புள்ளிமானை கண்ட நாய்கள் மானை துரத்தியது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நாய்களை விரட்டி விட்டு புள்ளிமானை மீட்டனர். புள்ளிமான் பிடிபட்டது குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் புள்ளிமானுக்கு கால்நடை மருத்துவர் மூலம் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விடுவதற்கு லோடு ஆட்டோ மூலம் எடுத்து சென்றனர்.

Related Stories: