காஜாபேட்டையில் கஞ்சா விற்ற 2 பெண்கள் கைது

திருச்சி, ஜூன் 21: திருச்சி பாலக்கரை காஜாப்பேட்டையில் உள்ள பொது கழிப்பிடம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக பாலக்கரை இன்ஸ்பெக்டர் ஆரோக்கியதாஸ்க்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் சோதனை நடத்தினார். அப்போது அங்கு கஞ்சா விற்றுக்கொண்டிருந்த காஜாபேட்டையை சேர்ந்த அம்மாசி மனைவி கொளஞ்சியம்மாள்(48), இய்யாசு மனைவி சரசு(44) ஆகிய 2 பேரையும் கையும் களவுமாக பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் விற்பனை பணம் 200 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories: