சென்னை: வடபழனி, தாம்பரம் வழியாக ஆறு ஆண்டுகள் கழித்து அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதுதொடர்பான அறிப்பை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு விரைவு பேருந்துகள் அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகள் வடபழனி, அசோக் பில்லர், ஆலந்தூர், குரோம் ேபட்டை, தாம்பரம் வழியாக இயக்கப்படும். இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக அனைத்து விரைவு பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்படும் என்று கடந்த 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 6 ஆண்டுகளாக வெளியூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் மதுரவாயல் வழியாக இயக்கப்பட்டு வந்தன. தற்போது, மெட்ேரா மற்றும் மேம்பால பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதால் விரைவு பேருந்துகள் அனைத்தும் வடபழனி, தாம்பரம் வழியாக மீண்டும் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.