குண்டாசில் ரவுடி கைது

கீழ்ப்பாக்கம்: சென்னை ஓட்டேரியை சேர்ந்தவர் பரத் (28), பிரபல ரவுடி. இவர் மீது அசோக் நகர், கே.கே.நகர், புழல், தலைமைசெயலக காலனி ஆகிய காவல் நிலையங்களில் கொலை, கொலைமுயற்சி, வழிப்பறி, கொள்ளை, செயின் பறிப்பு, கஞ்சா மற்றும் ஆள் கடத்தல் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கொலை வழக்கு ஒன்றில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த  பரத், கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவானார். இந்நிலையில், ஓட்டேரி பகுதியில் பதுங்கி இருந்த பரத்தை போலீசார் கைது செய்தனர். தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அவரை, போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநான் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: