×

கே.கே. நகர் பகுதியில் நடுரோட்டில் மாணவர்கள் கட்டிப்புரண்டு சண்டை: வைரலாகும் வீடியோ

சென்னை: சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனை அருகில் மாநகர பேருந்து போக்குவரத்து பணிமனை அமைந்துள்ளது. இந்த பணிமனைக்கு ஒரு நாளைக்கு 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்றன. இதற்கு வெளியே எம்.ஜி.ஆர் நகர், அசோக் நகர், சிவன்பார்க் வழியாக வடபழனிக்கு செல்லும் பேருந்து நிறுத்தம் உள்ளது.  இந்த பேருந்து நிறுத்தத்திற்கு கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 50க்கும் மேற்பட்டவர்கள் பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வந்துள்ளனர். அவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே சண்டை போட்டுள்ளனர். பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பிறகு மறுபடியும் அந்த 2 மாணவர்களுக்கும் இடையே சண்டை வந்துள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தாக்கி பேசி வாக்குவாதம் செய்துள்ளனர்.

சக மாணவர்கள் அவர்களை சமாதானம் செய்யாமல் இரண்டு கும்பலாக பிரிந்து, இரண்டு பேரையும் சத்தம் போட்டு, கைதட்டி, ஆரவாரம் செய்து அடிடா, அடிடா என்று  தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர். இதையடுத்து, ஒரு மாணவர் தான் அணிந்திருந்த சட்டையை கழற்றி அருகில் இருந்த மாணவர்களிடம் கொடுத்து விட்டு மற்றொரு மாணவனை தாக்கினான். இதையடுத்து மற்றொரு மாணவனும் அவனை தாக்கவே இரண்டு பேரும் நடுரோட்டில் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். மேலும் தன்னுடைய பள்ளி மாணவர்கள் அவர்களை உற்சாகப்படுத்த அவர்கள் இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.பேருந்து நிறுத்தத்தில் இருந்த பொதுமக்கள் அவர்களை விலக்கி விட முயற்சி செய்தும் அவர்களால் சண்டையை நிறுத்த முடியவில்லை. அதன்பிறகு 5 நிமிடத்திற்கும் மேலாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இப்படி மாணவர்கள் கட்டிப் புரண்டு சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : town ,
× RELATED ஆரணி டவுன் தர்மராஜா கோயில் அக்னி...