×

அனாதை சடலங்களை அடக்கம் செய்யும் ஓய்வுப்பெற்ற எஸ்ஐக்கு எஸ்பி பாராட்டு

காஞ்சிபுரம், ஜூன் 21: அனாதை சடலங்களை அடக்கம் செய்யும், சமூக சேவகரான ஓய்வுபெற்ற எஸ்ஐக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் சீனிவாசன். ஓய்வு பெற்ற எஸ்ஐ. கடந்த 2006ம் ஆண்டு காவல் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். பணியில் இருக்கும்போது அண்ணா பதக்கம், முதலமைச்சர் பதக்கம் போன்ற பதக்கங்களையும், பல நற்பணி செய்ததற்காக பாராட்டுகளையும்பெற்றவர். பணி ஓய்வு பெற்றதில் இருந்து கடந்த 13 ஆண்டுகளாக காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அனாதை சடலங்களை தனது சொந்த செலவில்  அடக்கம் செய்யும் மகத்தான பணியினை செய்து வருகிறார்.இந்த சமூக பணிக்காக கடந்த ஆண்டு சிறந்த சமூக சேவகருக்கான விருதை, மாவட்ட கலெக்டரிடம் சீனிவாசன் பெற்றார். இவரது சமூக சேவையை பாராட்டி எஸ்பி சந்தோஷ் ஹதிமானி, சீனிவாசனை நேரில் அழைத்து பாராட்டி கௌரவித்தார்.

Tags : SP ,burial ,
× RELATED பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க...